Your Ad Here
Showing posts with label thala ajith. Show all posts
Showing posts with label thala ajith. Show all posts


a dealy in mangatha movie... at present the shooting was been over in mumbai.. and the team was in chennai now.. MR ajith kumar,premji amaran, was been working for dubbing.. and now they said that song will be released on May 1st of mr ajith kumar(thala) birthday.. friends we are legaly release the mankatha songs on our site...

கூலிப்படையை :அனுப்பி தாக்குதல் நடத்தினார்: அஜீத்தை கைது செய்ய வேண்டும்; ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேட்டிhttp://i50.tinypic.com/s2cjms.jpgசினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் (வயது 48). எம்.ஜி.ஆர். நகரில் உள்ள இவரது வீட்டில் நேற்று அதிகாலையில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது.இது தொடர்பாக நேற்று மாலையில் ஜாக்குவார் தங்கம், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் கொடுத்தார். துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் பரந்தாமன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அஜீத்குமார் மன்ற தென் சென்னை மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர், மேலாளர் உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் 15 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 506 (2) ஐ.பி.சி. கொலை மிரட்டல் 147, 148, 448, 294-பி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் அஜீத் குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தாக்குதல் நடந்தது பற்றி ஜாக்குவார் தங்கம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நேற்று அதிகாலை எனது வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் நேரடியாக புகார் தெரிவித்தேன். இது வரையில் அஜீத்குமார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் சீமான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் டைரக்டர் சீமான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வடிவேலு வீடு தாக்கப்பட்டபோது விஜயகாந்த் மீதும் வழக்கு போட்டார்கள். ஆனால் ஒரு தமிழனான எனது வீட்டில் பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள அஜீத்குமாரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மட்டும் போலீசார் மெத்தனமாக செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை. என் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலர் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று மாலையில் முடிவு செய்ய உள்ளேன். அதே நேரத்தில் அஜீத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் நான் இறங்குவேன்.

அஜீத் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது. தமிழ் உணர்வாளர்கள் அவரை வெளியில் நடமாட விட மாட்டார்கள்.

சினிமாவில் ஹீரோவாக இருக்கும் அஜீத் என் விஷயத்தில் வில்லனாக மாறி கூலிப்படையை அனுப்பி தாக்குதல் நடத்தி உள்ளார். இது மிகவும் கோழைத்தனமானது. அடுத்த கட்டமாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், டைரக்டர் சீமான் ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். மீண்டும் ஒருமுறை போலீஸ் கமிஷனரை சந்தித்து அஜீத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு முதல்-அமைச்சரை சந்தித்தும் முறையிட உள்ளேன். அவரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளேன். இது சம்பந்தமாக பேச நடிகர் சங்க தலைவர் சரத்குமார் என்னை அழைத்துள்ளார். இன்று அவரை சந்திக்க உள்ளேன்.

நடிகர் சங்கம், ஸ்டண்ட் யூனியன், பெப்சி அமைப்பு களிலும் அஜீத்குமார் மீது புகார் செய்ய உள்ளேன்.

உலகம் முழுவதிலும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட தமிழக மாணவர்கள் மீது ஆந்திராவில் தாக்குதல் நடந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் ஒரு தமிழனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என் வீட்டில் நடந்த தாக்குதலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிய வில்லை. நான் இயல்பாகவே மென்மையானவன். நான் வெகுண்டெழுந்தால் அது வேறு விதமாக இருக்கும்.

எனவே விரைவில் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ் உணர்வாளர்களுடன் கலந்து பேசி தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற தாக்குதல்களுக்கு முடிவு கட்ட உள்ளேன்.

கேள்வி:- அஜீத் கூறிய கருத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து உள்ளாரே?

பதில்:- ரஜினி ஒரு காமெடியர். தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார். கர்நாடகா சென்று விட்டால் அங்குள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுவார். இரண்டு மாநில மக்களிடமும் மன்னிப்பும் கேட்பார். திடீரென இரட்டை விரலை காட்டி இரட்டை இலைக்கு ஓட்டு போடச் சொல்லுவார். எனவே ரஜினி பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இவ்வாறு ஜாக்குவார் தங்கம் கூறினார்

அசல் – திரை விமர்சனம்

asal1 கிளாடியேட்டர் என்றொரு படம். ராஜா தன் மகனை நம்பாமல் தளபதியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். அது தெரிந்த மகன் தந்தையை கொன்றுவிட்டு, தளபதியின் குடும்பத்தை அழித்துவிட்டு, தளபதியை ஒரு கிளாடியேட்டராய் அலைய விட்டுவார். மகனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்த தளபதி எப்படி ஆட்சியை பிடிக்கிறான் என்பதுதான் கிளாடியேட்டர் கதை.

அப்பா அஜித் தன் மனைவிக்கு பிறந்த மகன்களை நம்பாமல், கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.
asal-ajith-sameera-reddy-bhavana படம் முழுக்க ப்ரான்சிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆல்மொஸ்ட் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட டைப்பில் ஒரு ஆக்‌ஷன், சேசிங் என்று ஆரம்பிக்கிறது படம். சேசிங் முடிந்தது, ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலிலேயே சமீரா ஒரு பாட்டூ பாடுகிறார். அஜித்தின் அறிமுகமும், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம், பல காட்சிகளில் பில்லாவின் தாக்கம் அதிகம்.

அஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார். ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
1203074589275 பிரான்ஸில் அஜித்தின் நிழலாய் சமீரா ரெட்டி. கொஞ்சம் மெலிந்து இன்னும் க்யூட்டாக இருக்கிறார். சில காட்சிகளில் அழகில்லாமல் இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக ஏதும் வாய்பில்லை. பாவனா வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் போல் ஒரு லூசுப் பெண்ணாய் அறிமுகமாகி நெடுக அதே போல் நடிக்கிறார்.

வில்லன்களாக சம்பத், ராஜிவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், கெல்லி. இதில் கெல்லியை தவிர மற்றவர்கள் ரொம்பவே சோப்ளாங்கி வில்லன்கள். யூகிசேது அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் ரேஞ்சில் ஒரு டான் கேரக்டரை செய்திருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பழைய ஹீரோ சுரேஷ் பிரெஞ்சு போலீஸாய் வில்லன்களில் ஒரு ஆளாய் வருகிறார். க்ளைமாக்ஸில் அவர் அப்படியே குண்டு கட்டாய் மாறுவது படு பழைய சினிமா.
asal கதை, திரைக்கதை, வசனத்தில் அஜித்குமாரின் பெயரும் சரண், யூகிசேதுவுடன் போடப்படுகிறது. அஜித் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். யூகிசேது, அஜித் காம்பினேஷன் ஏற்கனவே வில்லன் பட ஹிட்டடித்திருப்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் திரைக்கதையில் இரண்டாவது பாதியில் மொக்கை வில்லன்களால் பெரிதாய் ஏதும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமே. முழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறபடியால் மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம்.
asal-0002 பிரசாந்தின் கேமரா, பிரான்ஸையும், மலேசியாவையும், கண் குளிர அழகாய் படமெடுத்திருக்கிறார். ஆரம்ப சேஸிங் காட்சியாகட்டும், மும்பை கடலோர போட் துரத்தலாகட்டும் நச். பல இடங்களில் இவரது அழகான பிரேமிங்கினால் படம் தொய்வில்லாமல் தெரிகிறது என்றால் அது மிகையில்லை.

ஆண்டனியின் எடிட்டிங் நச். மிக ஸ்டைலிஷான ஒரு எடிட்டிங். சண்டை காட்சிகளில் இவரது எடிட்டிங் தான் அஜித்தை தூக்கி நிறுத்துகிறது. பரத்வாஜின் இசையில் ‘துஷ்யந்தன்” பாட்டை தவிர, பெரிதாய் எதுவும் மனதில் நிற்கவில்லை. கமினே “டொட்டடய்ங்”கை லவட்டி ஒரு ட்யூனை போட்டுவிட்டார்.பிண்ணனி இசை ஒன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை.
asal-050210 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். ரிச்சான லொக்கேஷன், அஜித், சிவாஜி ப்ரொடக்‌ஷன் என்று எல்லாமே கிடைத்திருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கலாம். டெக்னிகலாய் படம் நன்றாக இருந்தாலும், உள்ளடக்க கதையும், திரைக்கதையும் பழசாய் இருப்பதால் விறுவிறு என போக வேண்டிய படம் ப்ளாட்டாக போகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் மனோகரா சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை. அஜித்துக்கான சரியான ரீமேக் படத்தை சொல்கிறேன் முடிந்தால் அடுத்த படமாய் அதை எடுக்கலாம் ஹிந்தி படமான “ரேஸ்”

new movies

Your Ad Here